கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Tuesday, December 12, 2017

நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகுமார் அவர்கள். ‘ஙே’ என்ற ஓரெழுத்தைச் சொன்னாலே அவர் நினைவு வரும் அளவு அதைப் பிரபலமாக்கியவர். குமுதத்தில் அவர் எழுதிய ‘வால்கள்’ என்கிற தொடர் சிறுகதைகள்தான் எழுத்துலகில் அவருக்குப் பெரும் பெயரை வாங்கித் தந்து “யார் இந்த ராஜேந்திரகுமார்?’ என்று கவனிக்க வைத்தது. பெண்கள் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் செய்யும் வால்தனங்களும் அடிக்கிற லூட்டிகளும்தான் அந்தக் கதைகளின் கரு. ஒவ்வொன்றும் படிக்க அத்தனை ஜாலியாக இருக்கும். அதற்குப் பிறகு ‘எப்படியடி காதலிப்பது?’, ‘நீயா என் காதலி?’, ‘நான் ஒரு ஏ’ என்று தொடர்ந்து நிறைய்ய நாவல்கள் எழுதித் தள்ளி, நீண்ட காலம் தமிழ் எழுத்துலகில் கோலோச்சினார்.


அவரின் ‘வால்கள்’ தொடர் சிறுகதைகள் முதலில் அபிராமி பப்ளிகேஷன்ஸால் வெளியிடப்பட்டது. பின்னாளில் கிழக்குப் பதிப்பகம் அவற்றை மறுபதிப்புச் செய்தது. ஆனால் இரண்டிலுமே ஏழு சிறுகதைகள்தான் இடம் பெற்றிருந்தன. அவர் எழுதியது 14 சிறுகதைகள் உண்மையில். பாதியை வேண்டாமென்று அவர் நிராகரித்து விட்டாரா புத்தகமாக்குவதற்கு, இல்லை, குமுதத்தில் வந்ததில் பாதியைத்தான் அவர் சேகரித்து வைத்திருந்தாரா என்பது இப்போது வரை எனக்குப் புரியாத புதிர். இன்றைக்கு டிசம்பர் 12. அவரது நினைவுதினம். இன்று அவர் வெளியிடாத வால்களின் ஒரு சிறுகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது பிடித்திருக்கிறது என்பீர்களேயானால் மற்ற ஆறும் வெளியிட உத்தேசம். ‘வால்கள் சோற்றுக்கு இது ஒரு பருக்கை உதாரணம்.










நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகுமார் அவர்கள். ‘ஙே’ என்ற ஓரெழுத்தைச் சொன்னாலே அவர் நினைவு வரும் அளவு அதைப் பிரபலமாக்கியவர். குமுதத்தில் அவர் எழுதிய ‘வால்கள்’ என்கிற தொடர் சிறுகதைகள்தான் எழுத்துலகில் அவருக்குப் பெரும் பெயரை வாங்கித் தந்து “யார் இந்த ராஜேந்திரகுமார்?’ என்று கவனிக்க வைத்தது. பெண்கள் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் செய்யும் வால்தனங்களும் அடிக்கிற லூட்டிகளும்தான் அந்தக் கதைகளின் கரு. ஒவ்வொன்றும் படிக்க அத்தனை ஜாலியாக இருக்கும். அதற்குப் பிறகு ‘எப்படியடி காதலிப்பது?’, ‘நீயா என் காதலி?’, ‘நான் ஒரு ஏ’ என்று தொடர்ந்து நிறைய்ய நாவல்கள் எழுதித் தள்ளி, நீண்ட காலம் தமிழ் எழுத்துலகில் கோலோச்சினார்.


அவரின் ‘வால்கள்’ தொடர் சிறுகதைகள் முதலில் அபிராமி பப்ளிகேஷன்ஸால் வெளியிடப்பட்டது. பின்னாளில் கிழக்குப் பதிப்பகம் அவற்றை மறுபதிப்புச் செய்தது. ஆனால் இரண்டிலுமே ஏழு சிறுகதைகள்தான் இடம் பெற்றிருந்தன. அவர் எழுதியது 14 சிறுகதைகள் உண்மையில். பாதியை வேண்டாமென்று அவர் நிராகரித்து விட்டாரா புத்தகமாக்குவதற்கு, இல்லை, குமுதத்தில் வந்ததில் பாதியைத்தான் அவர் சேகரித்து வைத்திருந்தாரா என்பது இப்போது வரை எனக்குப் புரியாத புதிர். இன்றைக்கு டிசம்பர் 12. அவரது நினைவுதினம். இன்று அவர் வெளியிடாத வால்களின் ஒரு சிறுகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது பிடித்திருக்கிறது என்பீர்களேயானால் மற்ற ஆறும் வெளியிட உத்தேசம். ‘வால்கள் சோற்றுக்கு இது ஒரு பருக்கை உதாரணம்.










Tuesday, October 4, 2016


1982ம் ஆண்டு நான் பள்ளி மாணவனாக இருந்தபோது ‘கமலம்’ பத்திரிகையின் முதல் இதழ் வெளியானது. சரித்திரக்கதை வித்தகர் சாண்டில்யன் அவர்கள் ஆசியராகப் பொறுப்பேற்றிருந்தார். அவரது கதைகள் எதுவும் அதுவரை படித்திராததால் அவர் எத்தனை பெரிய எழுத்தாளர் என்பது எனக்குக் கிஞ்சித்தும் தெரியாது. ‘சாண்டில்யனின் கதாபாத்திரங்கள் உங்களுடன் பேசுகிறார்கள்’ என்று தலைப்பிட்டு யவனராணி பேசுவதாக ஒரு கட்டுரை முதல் இதழில் வந்திருந்தது. இரண்டாம் இதழில் மஞ்சளழகி பேசுவதாக ஒரு கட்டுரை. இரண்டையும் படித்தேன். சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. என்றாலும் யார் இந்த யவனராணி, மஞ்சளழகி என்பது புரியாத நிலையில் மனதில் தங்கவில்லை. பின்னாளில் சாண்டில்யனை முழுமையாகப் படித்து ரசித்த சமயங்களில்தான் இந்தக் கட்டுரைகளையும் அதன் முழு வீச்சுடன் ரசிக்க முடிந்தது.

முதல் சில இதழ்களிலேயே சாண்டில்யன் ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். அதன்பின் இருகூரான் என்பவர் ஆசிரியராக இருந்து சிலமாதங்கள் வெளியானது. அதன்பின் அந்த வார இதழ் வரா இதழானது. சாண்டில்யன் விலகியதுமே இந்தக் கதாபாத்திர உரையாடல் தொடர் வெளிவராமல் போனது. அது பெரிய விஷயமல்ல... அவர் அந்த இதழில் தொடங்கியிருந்த ‘கடல் நீலி’ என்கிற தொடர்கதையும் பாதியில் நின்று போனது.

சாண்டில்யனின் ‘ராஜதிலகம்’ வாசித்திருக்கிறீர்களா? அற்புதமான நாவல். காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டிய ராஜசிம்ம பல்லவன் இளவரசனாக இருந்து சாளுக்கியர்களை வெற்றி  கொண்ட வரலாற்றை விவரிக்கிற கதை அது. பின்னாளில் ராஜசிம்மன் ஆட்சிக்கு வந்ததும் சீனம் வரை சென்று பல வெளிநாடுகளிலும் வெற்றிக் கொடி நாட்டினான். ”எனக்கு ஆயுளும் சமயமும் வாய்த்தால் பின்னொரு சமயம் அதை எழுதுகிறேன்.” என்று சாண்டில்யன் அத்தொடரை நிறைவு செய்கையில் குறிப்பிட்டிருந்தார். 

கமலம் இதழில் அந்த வரலாற்றைத்தான் அவர் எழுத ஆரம்பித்திருந்தார். ராஜசிம்ம பல்லவன் (இரண்டாம் நரசிம்மன்) மன்னனாக தன் இரு தேவியர்களுடன் வர, வேறோர் இளைஞனைக் கதாநாயகனாக வைத்துத் துவங்கி இருந்தார். அது பாதியில் நின்று விட்டது மிகப்பெரிய சோகம். 

பின்னாளில் அவர் உடல்நலக் குறைவுற்று நீண்ட மருத்துவமனை வாசத்திற்குப் பின் மீண்டு வந்ததும் குமுதம் வார இதழில் ‘சீன மோகினி’ என்ற தலைப்பில் அதே சரித்திரத்தை ராஜசிம்மன், அவன் தேவியர் தவிர வேறு பாத்திரங்களை மாற்றி புதிதாக எழுதத் தொடங்கினார்.  இம்முறையும் பாதியில் நின்று விட்டது அந்தச் சரித்திரக் கதை. காரணம் காலன் அவசரப்பட்டு அவரைக் கவர்ந்து சென்று விட்டதால்.
இரண்டு முறையும் கால் பகுதிகூட வராமல் அக்கதை நின்றுவிட்டதில் ஆர்வமுடன் படித்து வந்த வாசகனாக எனக்கு மிக வருத்தம்தான். ‘சீன மோகினி’ வந்த குமுதப் பிரதிகள் என்னிடமில்லை. ஆனால் யவனராணியின் உரையும், கடல் நீலியின் முதல் அத்தியாயமும் இங்கே உங்களுக்காகத் தந்துள்ளேன். படியுங்கள், ரசியுங்கள், ரசித்ததைக் கூறுங்கள்.




1982ம் ஆண்டு நான் பள்ளி மாணவனாக இருந்தபோது ‘கமலம்’ பத்திரிகையின் முதல் இதழ் வெளியானது. சரித்திரக்கதை வித்தகர் சாண்டில்யன் அவர்கள் ஆசியராகப் பொறுப்பேற்றிருந்தார். அவரது கதைகள் எதுவும் அதுவரை படித்திராததால் அவர் எத்தனை பெரிய எழுத்தாளர் என்பது எனக்குக் கிஞ்சித்தும் தெரியாது. ‘சாண்டில்யனின் கதாபாத்திரங்கள் உங்களுடன் பேசுகிறார்கள்’ என்று தலைப்பிட்டு யவனராணி பேசுவதாக ஒரு கட்டுரை முதல் இதழில் வந்திருந்தது. இரண்டாம் இதழில் மஞ்சளழகி பேசுவதாக ஒரு கட்டுரை. இரண்டையும் படித்தேன். சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. என்றாலும் யார் இந்த யவனராணி, மஞ்சளழகி என்பது புரியாத நிலையில் மனதில் தங்கவில்லை. பின்னாளில் சாண்டில்யனை முழுமையாகப் படித்து ரசித்த சமயங்களில்தான் இந்தக் கட்டுரைகளையும் அதன் முழு வீச்சுடன் ரசிக்க முடிந்தது.

முதல் சில இதழ்களிலேயே சாண்டில்யன் ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். அதன்பின் இருகூரான் என்பவர் ஆசிரியராக இருந்து சிலமாதங்கள் வெளியானது. அதன்பின் அந்த வார இதழ் வரா இதழானது. சாண்டில்யன் விலகியதுமே இந்தக் கதாபாத்திர உரையாடல் தொடர் வெளிவராமல் போனது. அது பெரிய விஷயமல்ல... அவர் அந்த இதழில் தொடங்கியிருந்த ‘கடல் நீலி’ என்கிற தொடர்கதையும் பாதியில் நின்று போனது.

சாண்டில்யனின் ‘ராஜதிலகம்’ வாசித்திருக்கிறீர்களா? அற்புதமான நாவல். காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டிய ராஜசிம்ம பல்லவன் இளவரசனாக இருந்து சாளுக்கியர்களை வெற்றி  கொண்ட வரலாற்றை விவரிக்கிற கதை அது. பின்னாளில் ராஜசிம்மன் ஆட்சிக்கு வந்ததும் சீனம் வரை சென்று பல வெளிநாடுகளிலும் வெற்றிக் கொடி நாட்டினான். ”எனக்கு ஆயுளும் சமயமும் வாய்த்தால் பின்னொரு சமயம் அதை எழுதுகிறேன்.” என்று சாண்டில்யன் அத்தொடரை நிறைவு செய்கையில் குறிப்பிட்டிருந்தார். 

கமலம் இதழில் அந்த வரலாற்றைத்தான் அவர் எழுத ஆரம்பித்திருந்தார். ராஜசிம்ம பல்லவன் (இரண்டாம் நரசிம்மன்) மன்னனாக தன் இரு தேவியர்களுடன் வர, வேறோர் இளைஞனைக் கதாநாயகனாக வைத்துத் துவங்கி இருந்தார். அது பாதியில் நின்று விட்டது மிகப்பெரிய சோகம். 

பின்னாளில் அவர் உடல்நலக் குறைவுற்று நீண்ட மருத்துவமனை வாசத்திற்குப் பின் மீண்டு வந்ததும் குமுதம் வார இதழில் ‘சீன மோகினி’ என்ற தலைப்பில் அதே சரித்திரத்தை ராஜசிம்மன், அவன் தேவியர் தவிர வேறு பாத்திரங்களை மாற்றி புதிதாக எழுதத் தொடங்கினார்.  இம்முறையும் பாதியில் நின்று விட்டது அந்தச் சரித்திரக் கதை. காரணம் காலன் அவசரப்பட்டு அவரைக் கவர்ந்து சென்று விட்டதால்.
இரண்டு முறையும் கால் பகுதிகூட வராமல் அக்கதை நின்றுவிட்டதில் ஆர்வமுடன் படித்து வந்த வாசகனாக எனக்கு மிக வருத்தம்தான். ‘சீன மோகினி’ வந்த குமுதப் பிரதிகள் என்னிடமில்லை. ஆனால் யவனராணியின் உரையும், கடல் நீலியின் முதல் அத்தியாயமும் இங்கே உங்களுக்காகத் தந்துள்ளேன். படியுங்கள், ரசியுங்கள், ரசித்ததைக் கூறுங்கள்.



Friday, July 17, 2015

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த (எதிர்பார்த்தீர்கள்தானே..) சித்திரக் கதையின் இரண்டாவது மற்றும் முடிவுப் பகுதி இதோ...


ஹவ் இஸ் திஸ்...?

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த (எதிர்பார்த்தீர்கள்தானே..) சித்திரக் கதையின் இரண்டாவது மற்றும் முடிவுப் பகுதி இதோ...


ஹவ் இஸ் திஸ்...?

Saturday, July 4, 2015

னதை நெகிழச் செய்யும் தன் சிறுகதைகள் பலவற்றால் என்னைக் கட்டிப் போட்ட நண்பர்கள் சுபா, பின்னாட்களில் பரபர விறுவிறு துப்பறியும் நாவல்கள் நிறையப் படித்து அவற்றையும் ரசிக்க வைத்தார்கள். துப்பறியும் ஜோடிகளில் இவர்களின் நரேந்திரன் -வைஜயந்திக்குத் தனியிடம் உண்டு. இந்த சித்திரக் கதையிலும் அவர்களின் அமர்க்களத்திற்குக் குறைவில்லை... பாருங்களேன்..!

தேடி வந்த ஸ்டெல்லாவை நரேந்திரன் கண்டுபிடித்தானா..? கண்டுபிடித்ததும் நிகழ்ந்தது என்ன..? கற்பனையைச் சற்று ஓடவிட்டு யூகியுங்கள்.. சுபா தந்திருக்கும் எதிர்பாராத அந்த முடிவை நான் தரும் அடுத்த பதிவில் கண்டு ரசியுங்கள்.

னதை நெகிழச் செய்யும் தன் சிறுகதைகள் பலவற்றால் என்னைக் கட்டிப் போட்ட நண்பர்கள் சுபா, பின்னாட்களில் பரபர விறுவிறு துப்பறியும் நாவல்கள் நிறையப் படித்து அவற்றையும் ரசிக்க வைத்தார்கள். துப்பறியும் ஜோடிகளில் இவர்களின் நரேந்திரன் -வைஜயந்திக்குத் தனியிடம் உண்டு. இந்த சித்திரக் கதையிலும் அவர்களின் அமர்க்களத்திற்குக் குறைவில்லை... பாருங்களேன்..!

தேடி வந்த ஸ்டெல்லாவை நரேந்திரன் கண்டுபிடித்தானா..? கண்டுபிடித்ததும் நிகழ்ந்தது என்ன..? கற்பனையைச் சற்று ஓடவிட்டு யூகியுங்கள்.. சுபா தந்திருக்கும் எதிர்பாராத அந்த முடிவை நான் தரும் அடுத்த பதிவில் கண்டு ரசியுங்கள்.

Saturday, June 27, 2015

சாவியை மாத்திட்டதால அவகிட்டருந்து தப்பிச்சுட்டம்னு நெனச்சான் அவன். ஆனா... (இப்பதான் இந்தப் பகிர்வைப் பாக்கறவங்க வேகமாப் போய் முதல் பாதியைப் பாத்துட்டு வந்துருங்க, க்விக்...)




புடிச்சிருக்கா இது...? இன்னொரு சுவாரஸ்யத்தோட திரும்ப வர்றேன்.

சாவியை மாத்திட்டதால அவகிட்டருந்து தப்பிச்சுட்டம்னு நெனச்சான் அவன். ஆனா... (இப்பதான் இந்தப் பகிர்வைப் பாக்கறவங்க வேகமாப் போய் முதல் பாதியைப் பாத்துட்டு வந்துருங்க, க்விக்...)




புடிச்சிருக்கா இது...? இன்னொரு சுவாரஸ்யத்தோட திரும்ப வர்றேன்.

Monday, June 22, 2015

ஆனந்த விகடன் தீபாவளி மலரில் முன்பு வெளியான சித்திரக் கதை இங்கே உங்களுக்காக... நன்றி ஆ.வி.!


சாவியை மாற்றிய அவன், அவளிடமிருந்து தப்பினானா... இல்லை, அவள் அதையும் சமாளித்தாளா... என்பதை அறிய அடுத்த பகிர்வு வரை.. வெய்ட்டீஸ் ப்ளீஸ்...!!

ஆனந்த விகடன் தீபாவளி மலரில் முன்பு வெளியான சித்திரக் கதை இங்கே உங்களுக்காக... நன்றி ஆ.வி.!


சாவியை மாற்றிய அவன், அவளிடமிருந்து தப்பினானா... இல்லை, அவள் அதையும் சமாளித்தாளா... என்பதை அறிய அடுத்த பகிர்வு வரை.. வெய்ட்டீஸ் ப்ளீஸ்...!!